states

img

லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பெடல் மாவட்டத்தில் இன்று காலை பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லாரியும் பேருந்தும் எதிரெதிர் திசையில் வந்தபோது திடீரென வளைவில் ஓட்டுநர் வண்டியை திரும்பியதும் விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்